DUBAI BOYS - YOUNG STAR DANCE VIDEO -
July 24, 2011
அமீரகம் ரமேஷ் ஜெயராஜ் அவர்களின் துபாய் பாய்ஸ் என்ற ஒரு கலக்கல் டான்ஸ் வீடியோ - இதில் ஸ்ரீ ராம் ,வெங்கி,ஜனா மற்றும் பலர் ஆடி உள்ளார்கள். இதை துபாயின் பல்வேறு பகுதிகளில் ரமேஷ் அவர்கள் ஒளி பதிவு செய்து வழங்கி உள்ளார்
Tags:
dubai boys - young star dance video
Posted at: 02:22 PM | 2 Comments | Add Comment | Permalink
June - 2011
July 24, 2011
P. இலக்கியா B.sc., - D.ராமசுப்ரமணியன் M.Tech.,திருமண விழா கட்டுக்குடிபட்டி திரு.L.பார்த்தசாரதி பிள்ளை திருமதி.மஞ்சுளா (அமெரிக்க) அவர்களின் மகள் செல்வி.P. இலக்கியா B.Sc., என்ற மணமகளுக்கும் காரைக்குடி சன்னவனம் திரு.ராம.துரைராசு பிள்ளை திருமதி.தமயந்தி அவர்களின் புதல்வன் செல்வன்.D.ராமசுப்ரமணியன்M.Tech., என்ற மணமகனுக்கும் கடந்த மாதம் 08.06.2011 புதன் கிழமை அன்று மதுரை தல்லாகுளம் லெட்சுமி சுந்தரம் ஹால் திருமண மண்டபத்தில் இவர்களின் திருமணம் இனிதே நடை பெற்றது. இவர்களின் திருமண விழாவில் திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் அமைச்சர் திரு.KR.பெரியகருப்பன் MLA., மற்றும் தென்னவன்,தமிழரசி ரவிக்குமார், ஆகியவர்களின் முன்னிலையில் மற்றும் நெம நகர் பிள்ளைமார்கள் சங்க தலைவர் சிறுகுடி திரு.ராம. சிவஞானம் பிள்ளை மற்றும் HOT Breads's நிறுவனர் திரு.மகாதேவன் அவர்களின் தலைமையில் திருமணம் இனிதே நடை பெற்றது. மணமகளின் தந்தை திரு.லெ.பார்த்த சாரதி அவர்கள் தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் ஹாட் பிரிட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மணமகனின் தந்தை திரு.ராம.துரை ராசு அவர்கள் கல்லால் ஒன்றியத்தின் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளராகவும் இந்நாள் மாவட்ட பிரிதிநிதியாக உள்ளார். மணமக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வேண்டு வாழ்த்துகிறோம். இவர்களின் திருமணத்தின் போடோஸ் பார்க்கா பின் வரும் லிங்கை கிளிக் செய்யவும் .
PHOTOS - CLICK - Here....
A.Muthalagu - Revathi Marriage Photos - Click this Link
05.06.2011
திருமண விழா
மணமகன் : M.அருணகிரி
மணமகள் : R.சுஜிதா
இன்று ( 05.06.11 ) ஞாற்றுக்கிழமை காலை 8 .00 மணிக்கு...
[More]
Tags:
june - 2011 - www.sirugudi.20m.com
Posted at: 02:05 PM | 0 Comments | Add Comment | Permalink
April-2011
June 3, 2011
சிறுகுடி திமுக தேர்தல் பிரசார வீடியோ
நேற்று மாலை ( 01.04.2011) நமது ஊரில் ( சிறுகுடியில் ) நத்தம் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் கா.விஜயன் அவர்கள் வாக்கு சேகரிக்க வந்த பொழுது நமது பகுதி பெண்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது . பின் நமது ஊரில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிக்க சென்ற வீடியோ காட்சிகள் தொகுத்து வழங்க பட்டுள்ளது.
Video - 1
Video - 2
Tags:
april-2011
Posted at: 01:31 AM | 0 Comments | Add Comment | Permalink
Sirugudi Thiruvizaa
April 3, 2011
Sirugudi Festival Photos - 2011
Video - Part - 1
(அம்மன் கண் திறப்பது மற்றும் அம்மனுக்கு ஆரத்தி அணிவகுப்பு - வீடியோ காட்சிகள் - 1 )
Video - Part - 2
(கேரளா சண்ட மேளம் மற்றும் கரகாட்டம் வீடியோ காட்சிகள் -2 )
Video - Part - 3
(அம்மன் விடை பெற்று செல்லும் வீடியோ காட்சி - 3 )
சிறுகுடி அருள்மிகு ஸ்ரீ மந்தை முத்தலமன் சுவாமிகள் கோவில் திருவிழா
வரும் 22.03.2011 & 23.03.2011 செவாய் மற்றும் புதன் கிழமை அன்று சிறுகுடி அருள்மிகு ஸ்ரீ மந்தை முத்தலமன் கோவில் திருவிழா நடை பெற இருக்கிறது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் . கடந்த வாரம் செவ்வாய் கிழமை அன்று திருவிழா நடத்துவது என்று ஊர் பெரியவர்களால் பேசி காப்பு கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து வரும் 22.03.2011 அன்று காலை அம்மனுக்கு காப்பு கட்டும் வைபவம் விழாவும் மாலை அம்மன் ஊருக்கு கொண்டு வரப்பட்டு இரவு நமது தெருவில் உள்ள சவுக்கைக்கு கொண்டுவந்து அமர்த்தப்படும். பின் சுவாமிக்கு நகை பூட்டி ஆரத்தி தீபாராதனை செய்து பல்லகில் அமர்த்தி நள்ளிரவு புறபட்டு மறு நாள் அதிகாலை கோவில் சென்று அடைவார்கள். பின் மாலை வரை பக்தர்கள் அம்மனை தரிசனம் நேர்த்திகடன் செய்து வழிபாடு நிகழ்சிகள் நடைபெறும். மாலை அம்மனுக்கு கிடாய் வெட்டி பூஜை செய்து வழி அனுப்பி வைக்கப்படும். முதல் நாள் ( 22.03.2011) அன்று நமது வெள்ளாளர் சமூதாயத்தின் சார்பாக இன்னிசை கச்சேரி நடை பெரும்.
மேலும் மற்ற சமூகத்தின் சார்பில் கலை நிகழ்சிகளும் நடைபெறும் . மறுநாள் (23.03.2011 ) அன்று இரவு ஸ்ரீ வள்ளி திருமணம் நாடகம் நடைபெரும். இந்த திருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற வேண்டுகிறோம் ....
[More]
Tags:
sirugudi thiruvizaa
Posted at: 01:30 AM | 0 Comments | Add Comment | Permalink
Sathish-Sarany Marriage
March 14, 2011
Photos - Click
சிறுகுடி RMK.இரமசுவாமி பிள்ளை மற்றும் கட்டுகுடிபட்டி வெ.நடராஜ பிள்ளை இல்ல திருமண விழா
சிறுகுடி தெய்வத்திரு.ராம.கரு.இராமசுவாமி பிள்ளை தையநாயகி அம்மாள் அவர்களின் பேரன்னும் திரு.ராம.ராமநாதன் பிள்ளை தேன்மொழி அம்மாள் அவர்களின் இளைய மகன் செல்வன் ராம. சத்தீஷ்காந்த் B.Tech., என்ற மணமகனுக்கும் கட்டுகுடிபட்டி திரு.ந.இராஜேந்தரன் பிள்ளை கமலவேணி அம்மாள் அவர்களின் பேத்தியும் திரு.இரா.நடராஜன் என்ற பாரதி பத்மாவதி அவர்களின் இளைய புதல்வி செல்வி. ந. சரண்யா M.B.A என்ற மணமகளுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இவர்களின் திருமண விழா வருகின்ற மாசி மாதம் 9இம் நாள் ( 21.02.2011 ) திங்கட்கிழமை அன்று காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்குள் மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருகோவிலில் திருப்பூட்டு நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து மற்ற சுப வைபவங்கள் மதுரை K.K.நகர் S.M.T மஹால் திருமணமண்டபத்தில் முன்னாள் அமைச்சர் உயர்திரு .செ.மாதவன் B.Com., B.L.,அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கிறது. முதல் நாள் மாலை 7.00 மணி அளவில் பரிசம் போடும் நிகழ்ச்சி மேற்படி மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.
மணமகன் சத்தீஷ் பெங்களூரில் California Software Co Ltd., நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவருடன் கூட பிறந்தவர் இவர் அண்ணன் மதன்மோகன் இவருக்கு 6 மாதம் முன்பு தான் திருமணம் நடை பெற்றது. மணமகள் சரண்யா Chennai Tata Consultancy Services இல் பணிபுரிகிறார். இவருடன் பிறந்தவர் ஒரு அக்கா திவ்யா கலைச்செல்வன் . மணமகள் சரண்யாவிக்கு மணமகன் சத்திஷ்காந்த் தாய் மாமன் மகன் ஆவார். இது பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட காதல் திருமணம் .எனது அன்புக்கு உரிய தம்பிமார்களில் சதீஷும் ஒருவன். அது போல எங்களது அத்தை மகளில் கடைக்குட்டி சரண்யாவும்...
[More]
Tags:
sathish-sarnya marriage
Posted at: 02:47 PM | 0 Comments | Add Comment | Permalink
Pongal Vizaa-2011
February 9, 2011
பொங்கல் விழா
நமது உறவினர்கள் அதிகம் வசிக்கும் சிறுகுடி மற்றும் கட்டுகுடிபட்டி சூரக்குடி ஆகிய கிராமங்களில் பொங்கல் விழா & மாட்டுபொங்கல் விழா மற்றும் விளயாட்டு போட்டிகள் நடை பெற்றது . இதன் புகை படங்கள் பல பேர்களின் Face Book இருந்து எடுத்து தொகுத்து வெளியிட்டு உள்ளோம்.
சிறுகுடி பொங்கல் விழா கடந்த 15 .01 . 2011 மற்றும் 16.01.2011 அன்று சிறுகுடியில் பொங்கல் விழா நிகழ்சிகள் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் குழந்தைகள் பெரும் அளவில் ஆர்வமுடன் பங்கு பெற்றார்கள். ஞாயிறு இரவு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் மற்றும் மாறுவேட போட்டிகள் நடைபெற்றது. இதில் குறிப்பாக 50வயதுக்கு மேற்பட்ட நமது தாய்குலங்கள் கலந்து கொண்ட நவீன மாடல் அழகி போட்டி அனைவரும் மிகவும் ரசித்து பார்த்தார்கள். இந்த ஆண்டு பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது வகுப்பு பொது தேர்வில் நமது உறவின் முறை மாணவர்களில் அதிகம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.2500.00 & இரண்டம் பரிசு ரூ.1500.00 மற்றும் மூன்றம் பரிசு ரூ.1000.00 என பரிசு தொகையும் ஷீல்ட் வழங்கப்பட்டது. இதில் இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் முதல் பரிசு இரண்டாவது பரிசு மற்றும் மூன்றாவது பரிசு அனைத்தும் சிறுகுடி திரு.சிவா.முத்துவடுகு பிள்ளை அவர்களின் சகோதரர் திரு.சிவா..கணேஷன் பிள்ளை - திருமதி. நித்தியா தம்பதிகள் சார்பாக ரூபாய் பத்து ஆயிரம் வழங்கினார்கள். அதே போல் அனைத்து மாணவர்களுக்கும் ஷீல்ட் சிறுகுடி திரு.ராம. கரு.முருகேசன் அவர்கள் தனது ஐயா மற்றும் தந்தை நினைவாக சுயமரியாதை மற்றும் திராவிட சுடர் என்ற பெயரில் ஷீல்ட் களை வழங்கினார்கள்...
[More]
Tags:
pongal vizaa - 2011
Posted at: 03:31 PM | 0 Comments | Add Comment | Permalink
DUBAI Jodi Porutham-2011
February 9, 2011
துபாய் ஜோடி பொருத்தம் நிகழ்ச்சியின் வீடியோ பார்க்க பின் வரும் லிங்கை கிளிக் செய்யவும்
Part - 1 ( Participator Introduction - போட்டியாளர்கள் அறிமுகம் )
Part - 3 ( 2nd Round - இரண்டாவது சுற்று )
4th & 5th round & final will be come soon.............
01.01.2010
அன்புள்ள உறவினர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .
நேற்று மாலை துபாயில் கட்டுகுடிபட்டி திரு.ஜெயராஜ் பிள்ளை சாந்தி தம்பதியர் இல்லத்தில் துபாய் வாழ் நேமநகர் பிள்ளைமார்கள் சார்பாக திருவாளர் & திருமதி என்ற ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்சிகளை திரு.ரமேஷ் ஜெயராஜ் மற்றும் அவரது மனைவி திருமதி.உமா ரமேஷ் அவர்கள் மிக சிறப்பாக இந்த போட்டியை தொகுத்து நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சி முதல் முறையாக நமது இணை தளம் துபாயில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்தது.ஆனால் நேற்று ( 31.12.10) அந்த நேரத்தில் பல இடங்களில் சரியாக பார்க்க முடியவில்லை என்ற கருத்துகள் வந்ததால் இதன் வீடியோ மறு ஒளிபாரப்பு மறுபடியும் வெளியீட்டு உள்ளோம். கண்டு மகிழவும் தங்களின் மேலான் ஆலோசனைகளை வழங்கும் படி கேட்டு கொள்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சிங்கம்புனாரி திரு. நவநீதன் பிள்ளை மற்றும் அவரது துணைவி திருமதி.சுசிலா தம்பதியர் வந்து இருந்து தலைமை ஏற்று பரிசுகளை வழங்கினார்கள். பின் வரும் ஜோடிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டார்கள்.
திரு.நா.ஜெயராஜ்-சாந்தி, (கட்டுகுடிபட்டி ) , திரு.ச.நாகலிங்கம் - சுதா ( சூரைகுடி )
திரு.மீ.சிவசங்கரன் - ஷர்மிளா ( கட்டுகுடிபட்டி),திரு.கோபி - லக்ஷ்மி பிரியா,(திருச்சி ), திரு.இ.இளமாறன் - ராஜி ( மதுரை ), திரு. ப.இளம்செழியன் - ஷண்முக பிரியா( மதுரை) .
இவர்களுக்கு 5 சுற்று கொண்ட போட்டி நடை பெற்றது. இறுதில் பின் வரும் நபர்கள் வெற்றிபெற்றர்கள் .
முதல்...
[More]
Tags:
dubai jodi porutham-2011
Posted at: 03:28 PM | 0 Comments | Add Comment | Permalink